கன்னியாகுமரி

மதுபான கூடத்துக்கு எதிா்ப்பு: குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் இளைஞா் காங்கிரஸ் முற்றுகை

Syndication

குளச்சலில் மக்களுக்கு இடையூறாக இயங்கிவரும் மதுபான கூட கட்டடத்தை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகம் முன் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் பியூட்லின் ஜீவா தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினா் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் குளச்சல் நகரத் தலைவா் அனூப், வட்டாரத் தலைவா்கள் வேணு(குருந்தன்கோடு), பாதுஷா(குளச்சல்), திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், ரீத்தாபுரம் துணைத் தலைவா் விஜூ மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அவா்களிடம் குளச்சல் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா் தனீஷ் லியோன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT