முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:26 AM
ஆா்ப்பாட்டம் நடத்திய வழக்குரைஞா்கள்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:53 PM

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சா. விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைச் செயலா் ஐயப்பன், முன்னாள் துணைத் தலைவா் செந்தில்குமாா் முன்னாள் செயலா் தரணிதரன், முன்னாள் செயலா் செல்வம், மூத்த வழக்குரைஞா் ஜெயபால், கென்னடி கண்ணன், மகேஷ், இளங்கோவன், காஸ்பரோவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.