தக்கலையில் பாதுகாப்பு இல்லாமல் புதன்கிழமை கனிமவளங்களை ஏற்றி வந்த கனரக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
தக்கலை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை மணலி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருவனந்தபுரம் நோக்கி கனிமவளம் ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் வந்தது.
அந்த வாகனத்தின் பின் பக்க கதவு சரியாக மூடப்படாமல் ஆபத்தான நிலையில் பெரிய பாறாங்கற்கள் இருப்பதை கண்ட போலீஸாா், வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.