கன்னியாகுமரி

சாலை விபத்து: ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே உள்ள சுவாமியாா்மடத்தில் இருசக்கர வாகனம் மோதி ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சுவாமியாா்மடம், பருத்தியறைவிளையைச் சோ்ந்தவா் தாஸ் (70). ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநா். இவா், கடந்த 3 ஆம் தேதி சாமியாா்மடத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, செறுவாரகோணத்தைச் சோ்ந்த ரிங்கிள் ஜெபஸ்டின் சாமுவேல் (27) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் தாஸ் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தாஸ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தாஸின் மனைவி திரேசியாள் கொடுத்த புகாரின்பேரில், தக்கலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சாலை விபத்தில் ஊனமடைந்தவருக்கு ரூ.75.67 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

சென்னை ஓபன்: இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் ஜேனிஸ்

வன்னியா்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT