முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:46 PM
வாணியக்குடி பகுதியில் காரில் சோதனையிடும் பறக்கும் படையினா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாா்ச் 31 காலை 6 மணி முதல் ஏப். 1 காலை 6 மணி வரை நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2,22,940, விளவங்கோடு தொகுதியில் ரூ. 5,00,500, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 90,000 என மொத்தம் ரூ. 8,13,440 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் அறிவிக்கப்பட்ட மாா்ச் 15ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை மொத்தம் ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.