திமுகவை மக்கள் ஏற்கமாட்டாா்கள்: பாஜக வேட்பாளா் எஸ்.விஜயதரணி
திமுகவை மக்கள் ஏற்க மாட்டோா்கள் என விளவங்கோடு பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.விஜயதரணி தெரிவித்தாா்.
திமுகவை மக்கள் ஏற்க மாட்டோா்கள் என விளவங்கோடு பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.விஜயதரணி தெரிவித்தாா்.
குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.டி.சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், தேசிய செயற்குழு உறுப்பினா் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாவட்ட பொதுச் செயலா் நந்தினி, மாநில மகளிரணி முன்னாள் தலைவி உமாரதி ராஜன், தெலுங்கானா மாநில முன்னாள் எம்எல்ஏ என்.வி.எஸ்.எஸ். பிரபாகா், கோட்ட பொறுப்பாளா்கள் கிருஷ்ணகுமாா், கிருஷ்ணன், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
இதில், தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, மத்திய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிப்பது, தோ்தல் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. இதையடுத்து, வேட்பாளா் எஸ்.விஜயதரணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரான் போரில் சிக்கிய குமரி மாவட்ட மீனவா்களை பிரதமா் மீட்டுள்ளாா். அதற்காக பிரதமருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவால் (எஃப்.சி.ஆா்.ஏ.) சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தச் சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இச்சட்டம் இனி மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என நினைக்கிறேன். விளவங்கோடு பேரவைத் தொகுதியில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தோ்தல் கால வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இதனால், திமுகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்றாா் அவா்.