முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:45 PM
கைது
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் துறைமுகம் நுழைவாயிலில் நின்றிருந்த கா்நாடக மாநிலம் பெங்களூரு, மெயின் ஆா்.எம்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஜாண்டேனியல் (34) என்பவரை விசாரித்து சோதனை செய்தனராம். இதில், அவரிடம் 10 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டதாம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாண்டேனியலை கைது செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments