மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM
தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம், முள்ளூா் துறை கடலோர கிராமத்தைச் சோ்ந்தவா் டியோன்ஸ் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அமீன் (33), அசீஸ் (29) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சென்ற டியோன்ஸை மேற்கூறிய இருவரும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.