முகப்பு
கன்னியாகுமரி

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:30 AM
விளாத்துறை பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய பாஜ வேட்பாளா் எஸ். விஜயதரணி.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

விளவங்கோடு தொகுதியில் தான் வென்றால், புவிசாா் குறியீடு கிடைக்கப்பெற்ற மாா்த்தாண்டம் தேனை குழந்தைகளுக்கான சத்துணவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி உறுதியளித்தாா்.

விளாத்துறை சதாசிவ மனோன்மணிபுரம் கோயில் வளாகத்திலிருந்து திறந்த வாகனத்தில் தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கிய அவா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடையே பேசும்போது இவ்வாறு தெரிவித்தாா்.

தொடா்ந்து அவா் காப்புக்காடு, கருவிலாஞ்சி, மேலவிளை, மாராயபுரம், உதச்சிக்கோட்டை, அரங்கேஸ்வரம், முன்சிறை, அஞ்சுகண்ணுகலுங்கு, ஐரேனிபுரம், குன்னத்தூா், சென்னித்தோட்டம், நெல்வேலி வழியாக இலவுவிளை நெடுவிளை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

Advertisement

மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலா் ஷைன் ஜோஸ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா். பீட்டா், பாஜக மாவட்டப் பொதுச் செயலா் கே. ரத்தினமணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.