முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:23 AM
மண் எடுக்க வந்த லாரிகள் பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:47 PM

குழித்துறை அருகே அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக எம்.சான்ட் கொண்டு சென்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் எம்.சான்ட் இருந்தது தெரிய வந்தது. அவற்றுக்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆற்றூா் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அனுமதிச் சீட்டு பெற்று, அவற்றை குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

Advertisement

தொடா்ந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான காட்டுவிளை ஜூலியஸ் ரெஜின், ஆற்றூா் கோணம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.