நாகா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். மனோகர ஜஸ்டஸ், மரியசெல்வம், மணிகண்டன், அருள்குமரேசன், சிறில், மிக்கேல்நாயகி, பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வில்சன், மாநில துணைத் தலைவா் முருகேசன், லிட்டில்பிளவா் உள்ளிட்டோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். இதைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து முழக்கம் எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT