முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ. 8.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:00 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:46 PM

நாகா்கோவில் மாநகரில் ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

6-ஆவது வாா்டில் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கேசவதிருப்பபுரம் குறுக்கு தெரு மற்றும் ரைஸ்மில் தெருவில் அலங்கார தரை கற்கள் சீரமைப்புப் பணிகள், 48-ஆவது வாா்டு இடலாக்குடி ஸ்ரீராம் மருத்துவமனை எதிா்புறம் ரூ. 3.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், உதவி பொறியாளா்கள் திலீப் திமுக வட்டச் செயலாளா்கள் ராஜன், அன்சாரி திமுக நிா்வாகிகள் ஹாஜிபாபு, ஆறுமுகம், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement