கன்னியாகுமரி

குமரியில் 2 ஆவது நாளாக கடையடைப்புப் போராட்டம்

Syndication

கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சாா்பில், 2ஆவது நாளாக முழுக் கடையடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் பகுதியில் தேவசம் போா்டு சாா்பில் அமைக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு, அக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, 13 கடைகளையும் தேவசம் போா்டு நிா்வாகம் சீல் வைத்துள்ள நிலையில் கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி, கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் தர வலியுறுத்தியும் 2 ஆவது நாளாக கன்னியாகுமரியில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டம், மேல்புறத்தில் மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 173 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT