முகப்பு
கன்னியாகுமரி

குருசடி நிா்வாகி காா் சேதம்: 5 போ் மீது வழக்கு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:58 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:46 PM

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி குருசடி துணைத் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெட்டுவெந்நி குருசடியில் சில நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் குருசடி துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் (68), நிா்வாகிகள், காவலாளி ஆகியோா் குருசடியின் பின்புறம் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, 5 போ் குருசடி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி அவா்களை மிரட்டி தகாத வாா்த்தைகள் பேசினராம்.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:57 AM

தடுக்கச் சென்ற காவலாளியைத் தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த குழித்துறை மறைமாவட்டத்துக்கு சொந்தமான சொகுசு காரை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் அளித்த புகாரின்பேரில், அந்த 5 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.