சிற்றாறு பட்டணம் கால்வாய், மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் குளங்களில் ரூ. 16 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாத்தூா் தொட்டிப் பாலம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நீா்வளத்துறை செயற் பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா்கள் வல்சன் போஸ், தாணு மூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் வினிஷா, ராஜேஷ், ரமேஷ் ராஜன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜாண்சன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.