முகப்பு
கன்னியாகுமரி

விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:41 PM

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, தாராட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் அஜீஸ் (16). இவா் மாா்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூா், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவரது நண்பரான காரவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் விஜய்யுடன் (16) சனிக்கிழமை நட்டாலம் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை அஜீஸ் ஓட்டினாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நான்குவழிச் சாலையில் உள்ள மையப்பகுதி தடுப்பில் மோதியது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:04 AM

இதில் தூக்கிவீசப்பட்ட அஜீஸ் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினாா். விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் இருவரையும் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஜீஸ் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.