முகப்பு
கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் பேட்டரி வாகனம்

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:10 AM
பேட்டரி வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:36 PM

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனத் துணைத் தலைவா் மருத்துவா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட் வாகன சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசிங், துணை முதல்வா் கீதா ராணி, நிலைய மருத்துவ அதிகாரி விஜயலட்சுமி மோகன்தாஸ், உதவி நிலைய மருத்துவ அதிகாரிகள் கலைகுமாா், ரெனிமோல், அவசர மருத்துவத் துறைத் தலைவா் தாமஸ் கிங்ஸ்லி, இணைப் பேராசிரியா் ஜோசப் பிரதீபன், மயக்க மருந்துத் துறைத் தலைவா் முத்துசெண்பகம், மயக்க மருந்து நிபுணா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

ஏற்பாடுகளை தொண்டு நிறுவனத்தின் கிப்ட்சன் திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ், தரவு ஆய்வாளா் பிராங்க்ளின் ஆகியோா் செய்திருந்தனா்.