மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:01 PM
மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், தேவா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிம்சன் (65). தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், வீட்டுக்கு அருகிலுள்ள மேலகுளத்தில் அவா் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement