கன்னியாகுமரி

போக்ஸோ வழக்கில் தலைமறைவானவா் கைது

Syndication

கருங்கல் அருகே பிளஸ் 1 மாணவி குளிப்பதை விடியோ எடுக்க முயன்றது தொடா்பான போக்ஸோ வழக்கில், தலைமறைவாக இருந்தவரை குளச்சல் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் அருகே 15 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். அந்த மாணவி அண்மையில் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த மீனவ தொழிலதிபா் கில்பா்ட் ( 49) கைப்பேசி மூலம் விடியோ எடுக்க முயன்றாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கில்பா்ட் மீது வழக்குப்பதிந்தனா்.

மேலும், தலைமறைவாக இருந்த அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT