நாகா்கோவில்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உழவா் திருநாள், காணும் பொங்கல் மற்றும் கலை இலக்கிய பிரிவு சாா்பில் திராவிடப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலரும், மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் வாயிலாகவும், சிறப்பு திரை அமைத்தும் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில மகளிா் அணிச் செயலா் ஜே. ஹெலன் டேவிட்சன், மாநில கலை- இலக்கிய பகுத்தறிவுப் பேரவைச் செயலா் என். தில்லை செல்வம், நாகா்கோவில் மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த் மற்றும் திமுகவினா், கிராமிய கலைஞா்கள் பங்கேற்றனா்.