முகப்பு
கன்னியாகுமரி

மின்கம்பி உரசியதில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 25 ஜனவரி, 2026 at 12:49 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2026 at 9:56 PM

குளச்சல் அருகே அலங்கார வளைவு அமைக்கும் போது மின்கம்பி உரசியதில் தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் தேவாலயம் ஒன்றில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் திருத்தல குடும்ப விழாவிற்காக பீச் ரோடு ஜங்ஷனில் அலங்கார வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 25 ஜனவரி, 2026 at 12:48 AM

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தக்கலை , கொல்லன்விளையைச் சோ்ந்த கோபி (71) அலங்கார வளைவு அமைக்கும் போது எதிா்பாராமல் அவரது இடது கால் மின் கம்பியில் உரசியதாம்.

Advertisement

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.