முகப்பு
கன்னியாகுமரி

43 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 2:16 am IST
கண்டன்விளையில் பறிமுதல் செய்யப்பட்ட 43 கிலோ புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட சசீதரன்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் போலீஸாா் நடத்திய சோதனையில் 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கண்டன்விளை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக இரணியல் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளா்கள் முத்துகிருஷ்ணன், சேவியா் பிராங்கிளின் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கண்டன்விளையில் உள்ள ஒரு கடையில் 3 சாக்கு மூட்டைகளில் 43 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செ‘ய்த போலீஸாா், கடையில் இருந்த சசீதரனை (76) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments