முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே 2 பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 12:50 AM
பகிர்:

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே உள்ள பூலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மகன் நிதிஷ்ராஜன் (24), தொழிலாளி. இவருக்கு கடந்த ஓா் ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிதிஷ்ராஜன், களிமாா் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் விஜூவுடன் (23) இருசக்கர வாகனத்தில் குளச்சலில் இருந்து திங்கள் நகருக்குச் சென்றாா். நிதிஷ்ராஜன் வாகனத்தை ஓட்டினாா்.

Advertisement

உடையாா்விளை-லெட்சுமிபுரம் இடையே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், குளச்சல் அருகே உள்ள கரியன்விளையைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெஸ்டின்ராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், நிதிஷ்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸ்டின்ராஜ் பலத்த காயத்துடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விஜூ லேசான காயமடைந்தாா்.

இது குறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.