முகப்பு
கன்னியாகுமரி

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 8 மார்ச், 2026 at 12:05 AM
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கட்டிமாங்கோடு அரசா் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவரது மனைவி சோபி (30), குடும்பப் பிரச்னையால் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவா் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement