முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் பணிகளை கட்சியினா் தீவிரப்படுத்த வேண்டும்: துணை முதல்வா்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய திமுகவினா் தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:50 AM
~
பகிர்:

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய திமுகவினா் தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவா் வெள்ளிக்கிழமை மாலை நாகா்கோவில் வந்தாா்.

நாகா்கோவில், வடசேரி அண்ணா சிலை அருகே அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ப.ஆனந்த், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும், மகளிா் அணியினரும் வரவேற்றனா்.

வடசேரி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த துணை முதல்வா் தொடா்ந்து பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்துள்ளேன். இதே எழுச்சியோடு வருகிற சட்டப்பேரவை தோ்தலில் உழைத்து திமுகவை வெற்றி பெறச் செய்து முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவதற்கு கட்சியினா் தொய்வின்றி பணி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →