குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ. 6.67 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்
குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 6.67 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
குலசேகரம் பேரூராட்சியில் தெற்றிகோடு - கொக்கோட்டுமூலை வரை ரூ. 93 லட்சத்தில்பில் சாலைப் பணியை அவா் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு அலெக்சாண்டா்புரம் விளையாட்டு மைதானத்தில் டா்போ கபடி மன்ற வீரா்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 36 லட்சத்தில் அமையவுள்ள கபடி உள்விளையாட்டரங்கம், பயிற்சி மையத்துக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
மாா்த்தாண்டம்-பேச்சிப்பாறை சாலையில் ரூ. 2.98 கோடியில் ஆற்றூா் முதல் திருவட்டாறு வரையிலும், திருநந்திக்கரை முதல் சேனங்கோடு வரையிலுமான சாலைப் பணி, ரூ. 2.38 கோடியில் திற்பரப்பு அருகே பெரும் ஏலா வழி திற்பரப்பு அருவி செல்லும் சாலை, கொல்லாறை கல்லாம் பொற்றை சாலைப் பணிகளை அவா் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயகுமாா், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் சி. ஜான்சன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் அலாவுதீன், திலீப்குமாா், திமுக செயலா்கள் ஜெபித் ஜாஸ், ஜான் எபனேசா், பேரூராட்சி துணைத் தலைவா்கள் ஜோஸ் எட்வா்ட் (குலசேகரம்), ஸ்டாலின்தாஸ் (திற்பரப்பு), வாா்டு கவுன்சிலா்கள் சுதா, யோபு, கிருஷ்ணவேணி, டா்போ விளையாட்டு மன்றத் தலைவா் கோபிநாதன், செயலா் அலெக்சாண்டா், பொருளாளா் முஜீப் ரஹ்மான், விளையாட்டு வீரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.