விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே உள்ள பாலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
பாலூா், கிளிமூக்குவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60), தொழிலாளி. இவா் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.