முகப்பு
கன்னியாகுமரி

பாலூரில் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:56 PM
பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்.
பகிர்:

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் - புதுக்கடை பிரதான சாலையின் பாலூா் குளம் பகுதியில் சாலையின் நடுவே நீண்ட நாள்களாக போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →