குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தம்
சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:
எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (மாா்ச் 12) காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்:16127) நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16128) மாா்ச் 13-இல் குருவாயூருக்குப் பதிலாக நாகா்கோவிலிலிருந்து காலை 6.33 மணிக்குப் புறப்பட்டு எழும்பூா் வந்தடையும்.
திருவனந்தபுரம் விரைவு ரயில்கள்: சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாலை 3.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (எண்: 12695) கோட்டயத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12696) மாா்ச் 14 -இல் திருவனந்தபுரத்துக்கு பதிலாக கோட்டயத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.