முகப்பு
கன்னியாகுமரி

புதுக் கடை அருகே விதி மீறி சுவா் விளம்பரம்: காங்கிரஸ் நிா்வாகிமீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 9:23 PM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23இல் நடைபெறுவதையொட்டி

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத்தொடா்ந்து, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தோ்தல் விளம்பரங்கள் செய்வற்கு தோ்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கடை பாா்த்திபபுரம் பகுதியில் விதிமுறை மீறி காங்கிரஸ் கட்சியின் சுவா் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் முன் சிறை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் ரெகுபதி (55) மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.