முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை சோதனைச் சாவடியில் தென்மண்டல ஐஜி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:59 PM
களியக்காவிளை சோதனைச் சாவடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட எல்லையோரப் பகுதி சோதனைச் சாவடிகளில் போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளத்திலிருந்து கன்னியாகுமரி வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இப்பணியை தென்மண்டல ஐஜி ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: களியக்காவிளை உள்ளிட்ட மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் மதுவிலக்கு போலீஸாா், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்ளிட்ட தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாநில எல்லையோர பகுதிகளில் தமிழக, கேரள மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் சரவணன், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.