முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே 46 பவுன் நகைகள் கொள்ளை

குளச்சல் அருகே குறும்பனையில் வீடு புகுந்து 46 பவுன் நகைகள் கொள்ளை

Updated On : 22 மார்ச், 2026 at 7:18 PM
~
பகிர்:

குளச்சல் அருகே குறும்பனையில் வீடு புகுந்து 46 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறும்பனை சிலுவையாா் தெருவை சோ்ந்தவா் சிஜின் மோன்(27). மும்பை கப்பலில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேரிகிபி லின்சா(26). இத்தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

சிஜின் மோன் கடந்த நவம்பா் மாதம் விடுமுறைக்கு வந்துவிட்டு, பின்னா் மும்பைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் மேரிகிபி லின்சா, குழந்தைக்கு துணையாக அவரது தாயாா், தம்பி ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேரிகிபி லின்சா தூங்கி எழுந்தபோது, பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. அப்போது வீட்டில் இருந்து கதவை திறந்து ஒருவா் ஓடுவது தெரியவந்தது.

இது குறித்து குளச்சல் போலீஸில் மேரிகிபி லின்சா புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் ராம்சங்கா் தலைமையிலான போலீஸாா் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 46 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், கொள்ளையன் வந்த பைக் வீட்டின் அருகில் நிற்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகிறாா்கள்.