குமரியில் பாஜகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக மகளிா் அணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மகளிா் அணியினா், நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மகளிா் அணியினா், நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தோ்தல் களம் காண்கின்றன. இந்த நிலையில், இந்தக் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கன்னியாகுமரி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதி பாஜகவுக்கும், கிள்ளியூா் தொகுதி தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டது.
இது, குமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகா்கோவில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரத்துக்கு போட்டியிட வாய்ப்பளித்தால் அவரை எதிா்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளோா்.
இந்த நிலையில், மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வடசேரி எம்ஜிஆா் சிலை முன் அதிமுக மகளிா் அணியினா் வியாழக்கிழமை காலை திரண்டுவந்து அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். தளவாய்சுந்தரத்தின் படத்தைக் கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியினரிடையே ஏற்பட்ட இந்த கண்டன குரல்கள் அதிமுகவினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.