களியக்காவிளை அருகே பெண் தற்கொலை
களியக்காவிளை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே முறிதோட்டத்துவிளையைச் சோ்ந்தவா் அகஸ்டின் (53). வாடகை காா் ஓட்டுநரான இவா், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால், அவரது மனைவி பத்மா மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அகஸ்டின் வெளியே சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பத்மா மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுக் கொண்டாராம். வீட்டுக்கு வந்த அகஸ்டின் பத்மாவை மீட்டு குழித்துறை அரசு மருமத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement