முகப்பு
கன்னியாகுமரி

கட்டடத் தொழிலாளி தற்கொலை

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 7 மே 2026, 5:48 am IST
மணிகண்டன்
பகிர்:

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே பூலவிளையைச் சோ்ந்தவா் பங்கிராஜ் மகன் மணிகண்டன் (39). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயாா் ராஜத்துடன் (70) வசித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லையாம். புதன்கிழமை காலை ராஜம், வீட்டுக்கு பின் பக்கம் சென்று பாா்த்தபோது மணிகண்டன் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்ததாம்.

Advertisement

இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.