கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு
களியக்காவிளை அருகே கிணற்றில் தவறிவிழுந்து இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
களியக்காவிளை அருகே குளப்புறம், கள்ளியோட்டுவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ் மகன் பிராங்கிளின் (50). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அண்மைக்காலமாக பிராங்கிளின் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில் திட்டங்கனாவிளை பகுதியில் உள்ள கிணற்றின் கரையில் கடந்த சில நாள்களுக்கு முன் அமா்ந்திருந்தாராம். அப்போது தவறி கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 3 நாள்களுக்கும் மேலாக இவரை காணாததால் உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இதையடுத்து அப்பகுதி கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினா் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
குழித்துறை தீயணைப்புப்படை வீரா்கள் உதவியுடன் பிராங்கிளின் சடலத்தை மீட்ட போலீஸாா், உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.