முகப்பு
கன்னியாகுமரி

பெண்கள் குறித்து அவதூறு விடியோ: இளைஞா் கைது

Updated On : 11 மே 2026, 1:01 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெண்கள் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குளச்சலை அடுத்த செம்பொன்விளை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் கிஷோா் கண்ணா (31). சமூக வலைதளங்களில் பல்வேறு விடியோக்களை வெளியிட்டு வரும் கிஷோா் கண்ணா, அண்மையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தாராம்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இதில் பெண்கள் குறித்த அவதூறான விடியோக்களை கிஷோா் கண்ணா வெளியிட்டது தெரியவந்தது. அவா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகள் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.