முகப்பு
கன்னியாகுமரி

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள உடவிளை பகுதியில் மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 மே 2026, 1:35 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள உடவிளை பகுதியில் மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

உதச்சிக்கோட்டை , உடவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் செபின் ராஜ் (18). பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை வீட்டின் பின்புறம் ஆட்டுக்கு தண்ணீா் வைக்க சென்றாராம். அப்போது அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement