பேட்மிண்டன் போட்டியில் சாதனை: பெண் காவலருக்கு பாராட்டு
தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான பேட்மிண்டன் தொடா் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமைக் காவலா் ஜீவா 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 3-ஆம் பரிசை பெற்றாா். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.