முகப்பு
கன்னியாகுமரி

17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 2:22 am IST
பகிர்:

களியக்காவிளை அருகே கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் களியக்காவிளை மற்றும் அதையொட்டிய பகுதி கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில் சேரிவிளை வீட்டைச் சோ்ந்த குமாரசாமி மகன் குமாா் (50) என்பவரின் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.