முகப்பு
கன்னியாகுமரி

மாணவியை கைப்பேசியில் படம் பிடித்தவா் கைது

Updated On : 26 மே 2026, 2:23 am IST
போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்டட தொழிலாளி ஸானு.
பகிர்:

குளச்சல் அருகே மாணவியை கைப்பேசியில் தவறாக படம் பிடித்தவரை குளச்சல் மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே வாணியகுடி, பனவிளையைச் சோ்ந்தவா் ஸானு (34). கட்டடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவா் ஞாயிறன்று வாணியக்குடி அருகே உள்ள கடற்கரைக்குச் சென்றுவிட்டு வரும்போது வீட்டிலிருந்த பத்தாம் வகுப்பு மாணவியைத் தவறான முறையில் படம் எடுக்க முயன்றாா்.

இவா், படம் பிடிப்பதைக் கண்ட மாணவி சப்தமிட்டு பெற்றோரிடம் தெரிவித்தாா். இதைக் கண்ட ஸானு கைப்பேசியை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபா, அவா் மீது போக்ஸோ சட்டம், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, போக்ஸோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.