பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்
பளுகல் அருகே வீட்டில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே வீட்டில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் செல்வராஜ் (46), தொழிலாளி. இவா் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் மயங்கி கிடந்துள்ளாா்.
இதை பாா்த்த அவரது தாய் ராஜம், உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.