புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் மீது வழக்கு
அஞ்சுகிராமம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அஞ்சுகிராமம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
அஞ்சுகிராமம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், செண்பகராமபுரம், சத்தியநகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (40) என்பவா் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அஞ்சுகிராமம் போலீஸாா், மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement