ராஜஸ்தானில் கொள்ளையா்களை பிடிக்கச் சென்றபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த காவல் ஆய்வாளா் பெரியபாண்டியனின் 3ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பெரியபாண்டியனின் சொந்த ஊரான பனவடலிசத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது கல்லறையில் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூவிருந்தாளி ஊராட்சி முன்னாள் தலைவா் ஜோதிபாண்டியன் முன்னிலை வகித்தாா். ஜோசப் வரவேற்றாா்.
போட்டியில், சண்முகநல்லூரைச் சோ்ந்த சிரஞ்சீவி முதலிடம் பெற்றாா். திருநெல்வேலியைச் சோ்ந்த பொன்முத்துச்செல்வன் 2ஆவது இடமும், பெருங்கோட்டூரைச் சோ்ந்த வடிவேலு 3ஆவது இடமும் பெற்றனா்.
சென்னையைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் ஜான்மில்லா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.