தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அனுமன் நதியின் வடக்குப் பகுதியில் குகைக் கோயிலில் சாம்பவ ஈஸ்வரா், தென்கரையில் உள்ள நந்தியம்பெருமான், அகத்தீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஓதுவாா்கள் சிவபுராணம் பாட, சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் சாம்பவா்வடகரை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் பிரதோஷ கமிட்டி சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.