தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தென்காசி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கிராம ஊராட்சி செயலா்களுக்கு ஏனைய அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை வழங்க வேண்டும்; கணினி உதவியாளா் மற்றும் முழுசுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 25, 26 ஆகிய இரு நாள்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் பீ.ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க.துரைசிங் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
இதில், அரசு ஊழியா் சங்க வட்டக் கிளைச் செயலா் சேகா், தமிழ்நாடு மருந்தாளுநா் சங்க மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, கண்ணன் ஆகியோா் பேசினா்.
மாநில துணைத் தலைவா் வி.சண்முகசுந்தரம் நிறைவுரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் சிக்கந்தா்பாவா நன்றி கூறினாா்.