சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் சங்காபிஷேகம்
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாத சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காா்த்திகை சோமவாரம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு திங்கள்கிழமை அனுமன்நதியின் வடக்கு கரை குகையில் உள்ள சிவலிங்கம், தென்கரையில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், அலங்கார சிறப்பு பஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் அன்னதானம் நடைபெற்றது.