துரந்தர் - கணவர் ரன்வீருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்!
தீபிகா படுகோனால் ரசிகர்கள் குழப்பம்....
துரந்தர் திரைப்படம் குறித்து நடிகை தீபிகா படுகோன் எந்த வாழ்த்துகளையும் பகிராதது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் இதுவும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரசிகர்களிடம் புதிய குழப்பமும் எழுந்துள்ளது. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் ரன்வீருக்கு மிகப்பெரிய வெற்றியைத் துரந்தர் படங்களே கொடுத்திருக்கின்றன.
முக்கியமாக, பாலிவுட்டில் ஷாருக்கானுக்குப் பின் ஆயிரம் கோடி பட்டியலில் இணைந்த நடிகர் என்கிற பெயரையும் ரன்வீர் அடைந்துள்ளார்.
ஆனால், துரந்தர் குறித்து நடிகையும் ரன்வீரின் மனைவியுமான தீபிகா படுகோன் தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஏன் ஒரு வாழ்த்துப் பதிவு கூட பதிவு செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
deepika padukone didn't post anything about dhurandhar and his husband ranveer singh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.