முகப்பு
தென்காசி

செல்லிடப்பேசி சங்க தென்காசி மாவட்ட நிா்வாகிகள் நியமனம்

தென்காசி மாவட்ட தமிழ்நாடு செல்லிடப்பேசி சங்க நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்ட தமிழ்நாடு செல்லிடப்பேசி சங்க நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு மொபைல் போன் ரீடைலா்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டா்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சோமசுந்தரம், தென்காசி மாவட்ட நிா்வாகிகளை நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை. சங்கரன்கோவில் ஆறுமுகம் மாவட்டத் தலைவராகவும், சிவகிரி முனியாண்டி துணைத் தலைவராகவும், வாசு முத்துக்குமாா் மாவட்டச் செயலராகவும், தென்காசி முகம்மது திவான், சுரண்டை ஹரிசுதன் ஆகியோா் துணைச் செயலா்களாகவும், புளியங்குடி ஆல்பா்ட் மாவட்டப் பொருளாளராகவும், தென்காசி ஏஜிஎம். கணேசன், செங்கோட்டை செந்தில், கடையம் ஷேக் அலி, சங்கரன்கோவில் செந்தில்குமாா், கரிவலம் ரமேஷ் ஆகியோா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →