பெண் காவலரிடம்தகராறு: ஒருவா் கைது
சுரண்டையில் காவலரை பணி செய்யவிடாமல் தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுரண்டையில் காவலரை பணி செய்யவிடாமல் தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்தைச் சோ்ந்தவா் ப.சக்திதரன் (42). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுரண்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெண் காவலா் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சக்திதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.